தனிமை
வீடுண்டு
வாசலுண்டு,
முகமில்லை ,
பேசுதலில்லை
பிரியங்களின் சுவடில்லை
அன்பின் கண்ணீரோ, பிரியத்தின் கோபமோ ஏதுமில்லை
மீளமுடியாத புதைகுழியாய் காலம் அழுத்துகிறது
எல்லை மீறிப்போனபின்னும் ஏன் இன்னும்
சீவனம் தேடி துடித்திருக்கிறது உடல்
துரோகத்தின் வடுக்கள்
ஏமாளியின் இயலாமை
ஏமாளியின் இயலாமை
சிறுவாடு சேர்க்கும் கண்ணீர் துளிகள்
கேவலங்களினூடே பயணப்பட்ட கால்கள்
காத்திருக்கின்றன நம்பிக்கைகளை சுமந்தபடி
ஒரு
அர்ப்பணிப்பின் தாங்குதலுக்காக......
கோவிந்தராஜு
கோவிந்தராஜு
No comments:
Post a Comment