Saturday 26 May 2012

\

டெங்கு காய்ச்சல்

Dengue fever









தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சல் பல மாவட்டங்களை தாண்டி பரவி வருகிறது, இதோ அதோ என்று சுகாதாரத்துறை பணிகளை முடுக்கி விடுகிறது . நல்ல தண்ணீரில் வசிக்கும் கொசுக்களே இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது .

சுகாதாரம் முக்கியம். இந்தியா போன்ற நாடுகளின் சுகாதாரத்தின் லட்சணம் நமக்கு நன்கு தெரிந்தது தான்.

அதீதமான பயம் தெளிவில்லாமை. குழப்பம் என பல பிரச்சனைகளும் இதனோடு இணைந்து கொள்கிறது.

இந்த நேரத்தில் தமிழக ஹோமியேபதியர்களின் பங்களிப்பு மிக தேவையானது.

குறிகளை தொகுத்துக்கொள்வதும் தொகுத்தவைகளை பகிர்ந்து கொள்வதும் தேவையானது.








முதல் கட்டமாக.


Dr w.boericke, m d அவர்களின் repertory page no 924 ல் அவர் குறிப்பிடும் மருந்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



Acon;
Ars;
Bell
Bry;
Canth;
Cinch;
Eup-perf;
Gels;
Ipec;
Nux-v;
Rhus-t;
Rhus-v











இது தவிர புதிதாய் வரும் குறிகளை தொகுத்து நண்பர்களோடு விவாதித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.bhairavihomoeopathy



டெங்கு காய்ச்சலில் பயன் படும் மருந்துகள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில் அதன் குறிகளை தொகுத்து கொள்வது நோயாளிகளை புரிந்து கொள்ளவும் குறிகளை பரிசீலிக்கவும் உதவியாய் இருக்கும்,

இரண்டு விதமான நிலைகள் இப்போது தொகுக்கப்பட்டு இருக்கிறது


ஒன்று

Fever with headache
Exertion fever during
Joints pain
Muscular pain fever during
Swelling glands
Rash= urticaria fever during

இரண்டு

Bleeding gums
Severe eye pain behind the eye
Red balm & sole
Bone pain as if broken fever with rash
Heamorrhage in body
Red purple colour under the skin
Bloody nose during fever
 Black stool
Easily bruised feeling

இவைகளை விடவும் துயரரின் தனித்தன்மையே தீர்மானமானது.
இன்றைய தமிழ் சூழலில் நலிவுற்ற மக்களை காப்பதும், மேதை ஹானிமன் அவர்களின்  கனவை எதிர்பார்ப்பை தமிழ் மண்ணில் நிகழச்செய்வதும் நமது கடமையாகும், 

04-06-12

Saturday 19 May 2012


சர்வதேச சமுகம்.


உன் கள்ளத்தனமான மெளனம்

புதைமேட்டில் படிக்கப்படும் அனுதாப உரைகள்

நடுநிலையை தூக்கி நிற்கும்

மேதைமைதாங்கிய உன் கண்டனங்கள்

எல்லைகளை காட்டி கடமையை கைவிட்ட உன் நாசுக்கு,

அறத்தின் மதிப்பாறியாத உன் இதயம்




எனது இரத்தம்

உங்களின் அறிக்கையானது

எனது இரத்தம்

குளிருட்டப்பட்ட அறைகளில் விவாதமானது

எனது இரத்தம்

உன் தத்துவங்களை நனைத்த பின்னும்

எனது இரத்தம்

உன் கண்களை குருடாக்கிய பின்னும்

எனது இரத்தம்

ஏதுமற்ற எம் வாழ்வை சுட்டியபின்னும்

எனது இரத்தம்

ஏதிலியாய் கரைந்த பின்னும்

மெளனமாய் நாவுகளை உள் நோக்கி திருப்பினாய்


மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த உன் பண்பாட்டின் போது

வளமான நாகரீகத்தை கட்டமைத்தது என் மூத்தகுடிகள்

நீர் தடுத்தோம்

வயல் கண்டோம்

வானியல் கண்டோம்

வாழ்வின் வளமனைத்தும் கற்றுத்தெளிந்தோம்.

உம் நீண்டமெளனம்

எம் பிணக்குவியலுக்குள்ளும் புகுந்தது

அறிக்கைகளுக்காக மட்டும் திறந்தது உம் வாய்

எல்லாம் முடிந்த பின்னும் நாகரீக வாழ்க்கைக்காக
காத்திரு

நல்ல நல்ல வார்த்தைகளை தேர்வு செய்து கண்டணம் செய்

சுட்டெரிக்கும் அக்கினியை வயிற்றில் தாங்கி

உம் முகத்தில் உமிழ்ந்து சொல்கிறேன்

என் பாட்டன் முப்பாட்டனின் வார்த்தைகளை


யாதும் ஊரே

யாவரும் கேளீர்