Friday 1 June 2012


குஞ்சுப்பிள்ளையும்
குட்டிப்பூனையும்

என்னிடம் குஞ்சுப்பிள்ளை அடிக்கடி வருவாள்.

’’மாமா எனக்கு முட்டாய் மருந்து கொடு’’

பிள்ளைகள் தனக்கு எது வேண்டுமோ அதைக்கேட்க எப்போதும் தயங்கியதில்லை.

’’ உனக்கு என்ன பண்ணுது குஞ்சுபிள்ள’’

’’ தலவலி,  காச்சலு, பல்லுவலி, காலுவலி  ’’

எல்லாநோய்களும் தனக்கு இருப்பதாய் சொல்வாள். ஒரு கள்ளச்சிரிப்பு முகம் எங்கும் விரவிக்கிடக்கும்.

இவளுக்கு கொஞ்சம் ’’ இனிப்பு ’’வேண்டும். அதுவும் இலவசமாய் கிடைக்கும் போது ஒரு பொய் சொன்னால் பரவாயில்லை. பிள்ளைகள் பெரியவர்களிடம் இருந்து முதலில் பொய் சொல்ல கற்றுக்கொள்கிறார்கள்.

நான் கொஞ்சம் சிறப்பு மருந்தை கொடுத்து அனுப்புவேன். பதுமை மாதிரி திரும்புவாள்.

ஒரு நாள் ஒரு குட்டிப்பூனையோடு வந்தாள்